மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட சிறுவன்.! தாய் மற்றும் சகோதரிகளை இழந்து தனிமரமான சிறுவன்.!

மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராஜ்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் திங்கள்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மூன்றாம் மாடி திடீரென இடிந்து விழ தொடங்கியது. அதனையடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த 19 மணி நேரம் கழித்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய முகமது நதீம் பாங்கி என்ற 4வயதை சிறுவனை லேசான காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதனை ஆகஸ்ட் 26-ம் தேதி வீடு திரும்பிய சிறுவன் தற்போது சித்தியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் நிலையில், அந்த சிறுவனின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் விபத்தில் உயிரிழந்துள்ள செய்தி அனைவரையும் துயரத்தில் உள்ளாக்கியுள்ளது. சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் தாய், மற்றும் இரண்டு சகோதரிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தாய் மற்றும் சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த சிறுவனால் கடைசி நேரத்தில் கூட அவரது தாய் மற்றும் சகோதரிகளின் முகத்தை பார்க்க இயலாமல் போய் விட்டது. சிறுவனின் தந்தை துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் அவராலும் மனைவி, குழந்தைகளை பார்க்க இயலவில்லை. தற்போது சிறுவன் பாங்கி அம்மா மற்றும் சகோதரிகள் எங்கே என்று கேட்டு வருகிறாராம். அவரது உறவினர்கள் சிறுவனிடத்தில் அவர்கள் இறந்த செய்தியை கூற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

7 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

9 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

11 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

11 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

11 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

12 hours ago