டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு மர்ம நபர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே இரண்டாவது சிறந்த விமான நிலையம் எனும் பெயர் பெற்ற விமான நிலையம் தான் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் வருடத்திற்கு 2 கோடி முதல் 4 கோடி வரை பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்பொழுது இந்த மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

author avatar
Rebekal