திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர்.!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார் . உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சஞ்சய் தத் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, இந்த பதிவு நான் நன்றாக இருக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்காகவே பதிவு செய்தேன் .தான் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் ,தன்க்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் லீலாவதி மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியால் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திருமாபுவதாகவும், உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.