கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்!அதிர்ச்சியடைந்த மக்கள்!

கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்!அதிர்ச்சியடைந்த மக்கள்!

  • கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்.அதிர்ச்சியடைந்த மக்கள்.
  • மனைவி உறவினர்களுடன் தகரா ?என்ற பாணியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள பகுதி மாங்காடை அடுத்த கோவூரில் அணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஆவார்.இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் சரியாக பைனான்ஸ் காட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் திரும்ப வீடு திரும்பவில்லை.

இதன் காரணமாக பெற்றோர் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் யுவராஜ் கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் நேற்று காலை சரமாரியாக வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் யுவராஜின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் யுவராஜுக்கு திருமணமாகி இருப்பதாகவும் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இதன் காரணமாக அவருக்கும், அவரது மனைவியின் உறவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதன் காரணமாக யுவராஜின் மனைவியின் உறவினர்கள் அவரை கொலை செய்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகினறன.

மேலும் யுவராஜ் கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால், இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பாணியிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube