ஏரியில் காணாமல் போன பிரபல நடிகையின் உடல் மீட்பு.!

நடிகை நயா ரிவெரா உடல் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்பு.

நடிகை நயா ரிவெரா காலிஃபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தனது நான்கு வயது மகனான ஜோஸியுடன் இரு தினங்களுக்கு முன்பு படகு சவாரி சென்றுள்ளார். அதனையடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஏரிக்கு நடுவில் நின்ற அந்த படகில் மகன் ஜோஸி மட்டும் தூங்கி கொண்டிருந்ததை மற்றொரு படகில் சென்ற நபர் பார்த்து, அந்த குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

அதனையடுத்து போலீசார் மகன் ஜோஸியிடம் விசாரணை நடத்திய போது, தண்ணீரில் நீந்தி கொண்டிருந்த தாய், மீண்டும் படகுக்கு வர இயலவில்லை என்று ஜோஸி கூறியுள்ளார். உடனடியாக ஏரியில் தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், ஐந்து நாட்கள் பிறகு நடிகை நயா ரிவெரா உடல் ஆற்றிலிருந்து கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த காவல்துறையினர்  தற்கொலைக்கான எந்த ஒரு தடயமும் இல்லை. வெளி இது ஆட்கள் கடத்திச் சென்றதற்கான சாத்தியக் கூறுகளும் சிறிது குறைவாகவே இருந்தது மேலும் அதனால் நிச்சயம் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் நங்கள் நினைக்கிறோம், மேலும் இது நிச்சயம் தற்கொலை அல்லது கொலையாகவோ இருக்க நிச்சியம் வாய்ப்பில்லை எனவும், கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் தகவல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.