இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏறுமுகமாக இருந்து வரும் இந்த சமயத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 4,454 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதன் காரணத்தால் பலரும் தங்களால் இயன்ற பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் பலர் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா தடுப்பு பணிக்கு உதவி வருகிறது.
இப்போது பிசிசிஐ மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 லிட்டர் ஆக்சிஜன் சேமிக்கும் திறன் கொண்ட 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய அரசிற்கு வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…