சிறுமி பலாத்கார புகார்: மூவரில் ஒருவன் கைது

புதுடெல்லி: ஆண் நண்பனுடன் வெளியே சென்ற சிறுமி, அவனது நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லி சாஸ்திரி நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இரவு, தனது ஆண் நண்பனுடன் வெளியே சென்றார். இந்த தருணத்தை பயன்படுத்தி கொண்ட அவளது நண்பன், தனது சக சகநண்பர்கள் இருவரை சாராய் ரோகில்லா வரவழைத்துள்ளான். அங்கு மூவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

பின் இதனை வெளியே கூறினால், கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். எனினும் இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாள். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், சிறுமி தன்னை பலாத்காரம் செய்த மூவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 20 வயது சன்னுவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment