ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு ;பிசிசிஐ தகவல் ..!

கடந்த  2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 
2015-ம் ஆண்டில் இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து டெல்லி பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அவர் மீதான ஆயுட்கால தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. 
இதனை அடுத்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது முஸ்தாக், ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment