விசாகப்பட்டினம் மார்க்சிஸ்ட் கட்சி (சிபிஎம்) அலுவலகத்தை தாக்க ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் முயற்சி….!

விசாகப்பட்டினம் மார்க்சிஸ்ட் கட்சி (சிபிஎம்) அலுவலகத்தை தாக்க ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் முயற்சி. அடுத்த கணமே திரண்ட மார்க்சிஸ்ட்டுகள்,இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது .
நாடுமுழுவதும் சிபிஎம் அலுவலகத்திற்கு முன்பாகவே போராட்டம் நடத்த ஆர்எஸ்எஸ்/பாஜக திட்டமிட்டது. டெல்லியில் உள்ள முக்கியமான வீதியில் உள்ள சிபிஎம் மத்திய குழு அலுவலகத்திற்கு முன்பாகவே நடத்த முயற்சி எடுத்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று(அக்.7)காலை 10.45க்கு வடக்கு ஆந்திரா பாஜக எம்.எல்.சி மாதவ் தலைமையில் 200/300 பேர் திரண்டு கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவதுறாக வர்ணித்த பதாகைகளை ஏந்தி கொண்டு விசாகப்பட்டினம் சிபிஎம் அலுவலகம் முன்பு கூடி ரகளையில் ஈடுபட்டனர்.தாக்குதலுக்கு முயற்சி செய்தனர். உடனே நமது தோழர்களும் திரண்டனர். போலீஸ் தலையிட்டு பாஜக/ஆர்எஸ்எஸ்காரர்களை அகற்றி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment