“எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேருங்கள்”-கமல்

சென்னை: “எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா செய்ய இது வரை எந்த அரசியல் கட்சியினரும் கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா என் தமிழக முதல்வரை நேரிடையாக தாக்கி டுவிட் வெளியிட்டுள்ளார். நடிகர் கமலஹாசன் சமீப காலமாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது: ஊழல், துயர சம்பவங்கள் ஏதும் நடந்தால் ஒரு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என யாரும் கோராதது ஏன்? போதுமான குற்றங்கள் நடந்து விட்டன . எனது இலக்கு சிறப்பான தமிழகம், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது ? எனது கருத்துக்கு திமுக, அதிமுக உதவ வேண்டும். இல்லையெனில் வேறு கட்சியினரை தேட வேண்டும். சுதந்திரம், ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment