“சூர்யாவும் நானும் இணைந்து நடிப்போம் நடிகர் கார்த்தி பேட்டி.

           Image result for சூர்யா கார்த்தி
 

நடிகர் கார்த்தி “சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே இருந்தது மற்றும் நான் நடித்த  ,நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
Image result for சூர்யா கார்த்தி

அதிரடி படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தயாராகி உள்ளது. ‘ஆர்கானிக்’ உடைகளை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதற்கான கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம். என்று கூறினார் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment