Categories: Uncategory

உ.பி.யில் பயங்கரம் தூங்கி கொண்டு இருந்த சகோதிரிகளுக்கு தீ வைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 சகோதரிகள் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளனர். 19 மற்றும் 17 வயது நிரம்பிய சகோதரிகள் வீட்டில் கொசு வலைக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, வீட்டிலிருந்தவர்கள் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மூத்த சகோதரி 95 சதவீத தீக்காயங்களுடனும், இளைய சகோதரி 60 சதவீத தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவர், நானும், என் சகோதரியும் ஒரே படுக்கையில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது சுமார் 2 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எங்கள் அருகில் வந்து எங்கள் மீது பெட்ரோலை ஊற்றி, தீ பற்ற வைத்தார் என்று தெரிவித்துள்ளார். இளைஞர் ஒருவர் சில மாதங்களாக தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக இளைய சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 செல்போன்களை கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Castro Murugan
Tags: india

Recent Posts

உச்சத்தில் பதற்றம்… ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு!

Iran Israel Conflict : ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த…

22 mins ago

இனி பேரிடர் காலத்தில் கவலை இல்லை…செயற்கைக்கோள் மூலம் போன் பேசலாம்.!

China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம். பேரிடர் காலத்தில் மக்களை காப்பற்ற முக்கியமாக…

29 mins ago

நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா? காட்டத்துடன் பேசிய விஷால்!

Vishal : நடிகர் விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பற்றி சற்று கோபத்துடன் பேசியுள்ளார். நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரத்னம்…

35 mins ago

இன்றுடன் தபால் வாக்கு நிறைவு! நாளை பிரச்சாரம் ஓய்வு! இறுதி கட்டத்தில் மக்களவை தேர்தல்!

Election2024: இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

1 hour ago

வங்கதேச தொடருக்கான மகளிர் அணியை வெளியிட்டது பிசிசிஐ!!

T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய…

1 hour ago

சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17-…

2 hours ago