தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து, இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக, சினிமா தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி அறிவித்திருக்கிறது. சென்னை வடபழனியில், செய்தியாளர்களை சந்தித்த, அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இதனை கூறியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்தினர் ஊதியம் தொடர்பாக அளித்த ?உறுதிமொழியை நிறைவேற்றாமல், பெப்சிக்கு எதிராக வேறொரு அமைப்பை உருவாக்க விளம்பரம் கொடுத்திருப்பதாக ஆர்.கே.செல்வமணி குற்றம்சாட்டியிருக்கிறார்.