நான்கு நாட்களில் இந்த பொம்மை ஆட்சி கவிழும்: விஜயகாந்த் அதிரடி..!

நான்கு நாட்களில் இந்த பொம்மை ஆட்சி கவிழும்: விஜயகாந்த் அதிரடி..!

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று

பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் எந்த தண்ணீரில் குளித்தாலும் பாவம் போகாது என்றார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது. ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் பணத்துக்கானது. ஆனால், எனக்குக் கூடும் கூட்டம் அப்படியல்ல. விஜயதசமி அன்று ஆளுநர் வந்துள்ளார். இன்னும் நான்கு நாள்களுக்குள் இந்த பொம்மை ஆட்சி கவிழும் என்றார் விஜயகாந்த்.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *