Categories: Uncategory

டிரம்பின் பைத்தியக்காரத்தனம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் சே_குவேரா மகள் அலெய்டா பேச்சு!

அமெரிக்க ஜனாதிபதிடிரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து நிலவுவதாக சேகுவேராவின் மகள் அலெய்டா எச்சரித்துள்ளார்.அர்ஜெண்டினாவைச் சேர்ந்த புரட்சியாளர் சேகுவேரா, பிடல்காஸ்ட்ரோவுடன் சேர்ந்து கியூபாவின் விடுதலைக்காக போராடினார். அதில் வெற்றிபெற்ற அவர்,உலகத்தில் ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் சிக்கித்தவிக்கும் ஒவ்வொரு நாடும்விடுதலைப்பெற வேண்டும்என்ற மாபெரும் லட்சியத்தின் அடிப்படையில், பொலிவியா சென்றார். அவரை, 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம்தேதி கைதுசெய்த அமெரிக்கக் கைக்கூலி ஆட்சியாளர்களின் படைகள், படுகொலை செய்தன. அவர் கொல்லப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கியூபாவில் சாண்ட்டா கிளாராவில் உள்ள சே குவேராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.

இதில் கியூபா அதிபர் ரவுல்_காஸ்ட்ரோ மற்றும் பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கியூப தலைநகர் ஹவானாவில் சே குவேராவின் மூத்த மகள்- 57 வயதான அலெய்டா குவேரா செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அமெரிக்கஜனாதிபதி டெனால்டுடிரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமேஅழிந்துவிடும் ஆபத்து நிலவுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், நாம் மனித குலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதுதான் ட்ரம்புக்குப் பிரச்சனை என்றும், பைத் தியக்காரத்தனம் அதிகம் உடைய ஒருவரிடம் அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கிடைத்ததால், இன்றுபிரச்சனைகள் அதிகரித் துள்ளதாகவும் தெரிவித்தார்.நாம் வசிக்கும் உலகையே நாம் அழிக்கிறோம் என்பதை அறியாதவராக டிரம்ப் உள்ள நிலையில், மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது;

நமக்கு அதிக நேரம் இல்லை எனவும் கியூப மக்களுக்கு எடுத்துரைத்த அலெய்டா குவேரா, 1961-ஆம் ஆண்டு கியூபாவுடன் கைவிடப்பட்ட ஒப்பந்தத்தை 2014-ஆம் ஆண்டு பாரக்ஒபாமா மறுபரிசீலனை செய்ததை, ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்ததையும், ஜனாதிபதியான பின்பு தொழில் ரீதியிலான கியூபபயணத்துக்கு டிரம்ப் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், ட்ரம்பின் இந்தகட்டுப்பாடுகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றத்தை தேடுவதற்கான நேரம் இது;நோயைக் குணப்படுத்துவதை விட நோய் வரும் முன் தடுக்க வேண்டும் என்பதே கியூபாவின் கொள்கை என்றும் அலெய்டா தெரிவித்துள்ளார்.

Dinasuvadu desk
Tags: world

Recent Posts

ஐபிஎல் 2024: போராடிய குஜராத்… இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்ற டெல்லி அணி..!

ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

8 hours ago

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் குஜராத் அணி ..!! தாக்குப்புடிக்குமா டெல்லி ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…

11 hours ago

நாங்களும் வரோம்! ரீ-ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…

11 hours ago

ஓய்ந்தது பிரச்சாரம்…சூறாவளியாக சுழன்ற தலைவர்கள்.! சூப்பர் ஹைலைட்ஸ்…

LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…

11 hours ago

பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்!

Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…

12 hours ago

என்னது.. அதிகமா கோவப்பட்டால் முகச்சுருக்கம் ஏற்படுமா?..

Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான்…

12 hours ago