கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் தான் ‘அங்கமாலி டைரீஸ்’. இந்தப்படத்தில் நாயகனுக்கு இணையாக, ஆனால் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரத்குமார் என்கிற புதுமுகம். ஹீரோவை விட இவர்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அடுத்து, மோகன்லால்-லால்ஜோஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதோ இன்னும் சில தினங்களில் அந்தப்படமும் ரிலீசாக இருக்கிறது.இதுதவிர ‘போக்கிரி சைமன்’ என்கிற படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்துள்ள சரத்குமார், இந்தப்படத்தில் தீவிரமான விஜய் ரசிகராக நடித்துள்ளாராம்.. சினிமாவில் தான் விஜய் ரசிகர். ஆனால் நிஜத்திலோ இவர் விக்ரமின் ரசிகராம். விக்ரம் படங்களை ஒன்றுவிடாமல், ஒருமுறைக்கு இருமுறையாக பார்த்துவிடும் சரத்குமாருக்கு, விக்ரம் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து சிறிய வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது ஆசையாம்.