அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ‘ஹார்வி’ புயல், சமீபத்தில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், இங்கு, 1.30 கோடி பேர், மின் இணைப்பு, குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.இந்நிலையில், புயல் தாக்கிய அன்று, சுற்றுலா ஸ்தலமான பிரையன் பகுதியில் உள்ள ஏரியில், நீச்சல் அடிக்க சென்ற, இந்திய மாணவர்களான, நிகில் பாட்டியா, 20 மற்றும் ஷாலினி, 20, ஆகிய இருவரும் புயலில் சிக்கினர்.கடுமையான மழையைத் தொடர்ந்து, வெள்ளத்தில் அவர்கள் மூழ்கினர்; அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் நிகில் பாட்டியா சிகிச்சை பலனின்றி இறந்தார். ஷாலினி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.நிகில் பாட்டியா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஷாலினி டில்லியை சேர்ந்தவர். இருவரும் டெக்சாஸ் ஏ அன்ட் எம் பல்கலையில் பொது சுகாதாரத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…