வயதான ரியல் ஹீரோ..அசர்பைஜான் நாட்டில் அனைவரும் ஆச்சரியத்தில்!!!

அசர்பைஜான் நாட்டில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது.
இதில், முன்னால் சென்ற காரில் தீப்பிடித்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில்  சத்தம்போட்டனர்.கார் தீப்பிடித்து எரிந்ததால் காப்பாற்ற சென்றவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது முதியவர் ஒரு தைரியமாக அருகில் சென்று காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் கதவு திறக்காததால் உடனே அவர் காரை ஓங்கி ஒரு உதைவிட்டார். ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் காரின் மற்ற பக்கங்களின் வழியாகவும் சிலர் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இந்த வீடியோக்காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment