இலங்கையில் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி பிடித்திருந்த படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்றபோது, தமிழக மீனவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை. அதே சமயம் இந்திய கடலோரப் பகுதியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது, வழியில் ஒரு படகு பழுதாகி நின்றதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக மீனவர்களுக்கும், இந்திய கடற்படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் தாக்கியுள்ளனர். தங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை யும் இந்திய கடற்படை வீரர்கள் சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்திய கடற்படைத் தாக்குதலில் காயமடைந்த மீனவர் செந்தில்குமார் உள்ளிட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…