படகுகளை மீட்க சென்ற மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்….!

படகுகளை மீட்க சென்ற மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்….!

இலங்கையில் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி பிடித்திருந்த படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்றபோது, தமிழக மீனவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை. அதே சமயம் இந்திய கடலோரப் பகுதியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது, வழியில் ஒரு படகு பழுதாகி நின்றதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மீனவர்களுக்கும், இந்திய கடற்படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் தாக்கியுள்ளனர். தங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை யும் இந்திய கடற்படை வீரர்கள் சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்திய கடற்படைத் தாக்குதலில் காயமடைந்த மீனவர் செந்தில்குமார் உள்ளிட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *