Categories: இந்தியா

வரலாற்றில் இன்று – ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாள் இன்று….!

 இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை தூண்டியது. அக்டோபர் 20ம் தேதி பத்தான் பழங்குடிகளின் உடைகளில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் ஊடுருவியது. விழித்துக் கொண்ட மகராஜா ஹரி சிங் இந்தியாவின் உதவியை உடனடியாக நாடினார். அப்போது இந்தியாவின் முதலாம் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு எழுத்துபூர்வமாக சம்மதம் அளித்தால் மட்டுமே இந்திய ராணுவம் காஷ்மீருக்குள் நுழையலாம் என்று இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினார். ராஜா ஹரி சிங் இவ்வோசனையை ஏற்று “இன்ஸ்ட்ருமென்ட் ஆப் ஆக்சசன்” உடன்படிக்கையில் 1947 அக்டோபர் 26ம் தேதி கையொப்பமிட்டு கொடுத்தார். இந்திய அரசின் சார்பில் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டார். அதன்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் காஷ்மீரில் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தது. ஒப்பந்த விதிகளின்படி ராஜா ஹரி சிங்குக்கு மன்னர் மான்யம் அளிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் மாநில இடைக்கால அரசின் பிரதமராக ஷேக் அப்துல்லா இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பாகிஸ்தானின் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து பாகிஸ்தான் வசமே உள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…

35 seconds ago

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

37 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

44 mins ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

1 hour ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago

ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…

2 hours ago