இந்திய மண்ணில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) அறிவித்துள்ளது
காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் இடத்துக்கு முரளி விஜய் அணிக்கு திரும்பியதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான அபினவ் முகுந்த் நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் ஷர்மாவுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது .
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 வீரர்கள் கொண்ட பட்டியல்:-
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் திவான், கே. எல்.ராகுல், முரளி விஜய், சதீஸ்வர் புஜாரா, அஜின்கியா ரகானே (துணை கேப்டன்), ரோஹித் ஷர்மா, விருத்திமான் சாகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.