பிரியாங்க சோப்ரா இந்திய சினிமா மட்டும் அல்லாமல் ஹாலிவுட் வரை சென்று ஒரு கலக்கு கலக்கியவர் .
சமீப்பத்தில் அவர் கூறியது என்னவென்றால் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது போல இந்திய சினிமாவிலும் இருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி மீது ஏஞ்சலினா ஜோலி, லுபிடா ந்யாங்கோ உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் பாலியல் புகார் கூறினர்.
இதுகுறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியது , பாலியல் ரீதியான தொந்தரவு சினிமா துறையில் மட்டும் இல்லை எல்லா விதமான துறையிலும் உள்ளது. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. இது பாலியல் ரீதியான பிரச்சனை மட்டும் அல்ல, பெண்களின் வலிமையை அடக்கி ஆள நினைக்கும் ஆண்களின் அதிகாரத் தோணி. வெயின்ஸ்டீனைப் போன்ற நபர்கள் இங்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.இது போன்று அவர் கூறியது இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள.து