காவல் நிலையத்தை காணவில்லையாம் !படத்தின் பாணியில் அரங்கேறிய சம்பவம்….

நாம் கிணத்தை காணவில்லை என்று வடிவேலு படத்தில்  தான் பார்த்தோம்.
ஆனால் இங்கு  காவல் நிலையம் காணவில்லை !!!திருநெல்வேலி  மாவட்டதில் பச்சிளம் குழந்தைகள் உயிருடன் எரிந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி, அந்த துயர சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.

அதைவிட கொடுமை  என்னவென்றால் பாளையம்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் பதிவு தபாலில் அனுப்பிய எனது மனுவை பிரித்து படித்துவிட்டு அதன்பின் தவறான முகவரி என்று குறிப்புட்டு திருப்பி அவருக்கு  அனுப்பி இருக்கிறார்கள்…..
 எனினும்  அந்த காவல்நிலைய அதிகாரிகளை குறை சொல்ல வாய்ப்பு இல்லை. அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் கூறுவதற்கு கீழ்படிந்து தான் ஆகவேண்டும்.
நாளைக்கு ஏதாவது சட்ட பிரச்சனை என்று வரும்போது மேல் அதிகாரிகள் தப்பித்துக்கொள்வார்கள்….
இப்படித்தான் இடைநிலை ஊழியர்கள் படும் அவஸ்த்தை (காவல் துறையில் மட்டும்)………..நமக்கு தான் தெரியும்.
அஞ்சல் துறையும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளது அம்பலம்…இந்த  பாரதம் எங்கு தான் செல்கிறது …..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment