சென்னை : சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் கணவரின் உடல் நலம் போன்ற காரணத்திற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது என்றார். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் அடுத்த வெள்ளியன்று தினகரன் தரப்பில் வாதம் நடைபெறலாம் என்றும் அவர் கூறினார்.