Categories: இந்தியா

விஜய் மல்லையா,அமிதாப்பச்சன் வெளிநாட்டு முதலீடு :ஆய்வு முடிவில் அதிர்ச்சி …

                   
                     
வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு அதிக அளவில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்  உலகில் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து நடத்திய புலனாய்வில் வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகையை பயன்படுத்தி உலகச் செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

                           
 பாரடைஸ் பேப்பர்ஸ் என்னும் தகவலின்படி இந்தியாவில் உள்ள பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் இந்த புலனாய்வில் அம்பலம் ஆகியுள்ளது. பாரடைஸ் பேப்பர்ஸ் என்பது 1,34,00,000 ஆவணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆகும். அதன்படி வெளியான 180 நாடுகள் பட்டியலில் இந்தியா 19ம் இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 714 இந்தியர்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
                        


இந்தியர்களில் அமிதாப் பச்சன், விஜய் மல்லையா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜயந்த் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட் ஆகிய அரசியல்வாதிகளின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தவிர பிரபல பாலிவுட் நடிகரும் சர்ச்சைக்குரியவருமான சஞ்சய் தத்தின் மனைவி மன்யாதா தத், ஊழல் வழக்கில் இடைத்தரகரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் நீரா ராடியா ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.


இந்த தகவல்களை பாரடைஸ் பேப்பர்ஸின் இந்தியப் பங்காளரான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அளித்த தகவலின் படி இதில் பல இந்திய முன்னணி நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜிந்தால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹாவெல்ஸ், ஹிந்துஜாஸ், எம்ஆர்எஃப், வீடியோகோன், ஹிரானந்தானி குழுமம், மற்றும் டி எஸ் கன்ஸ்டிரன்கஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன என்று கூறப்படுகிறது. 

Dinasuvadu desk

Recent Posts

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…

7 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

36 mins ago

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…

40 mins ago

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…

42 mins ago

சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…

49 mins ago

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

1 hour ago