டெங்கு’ பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் உடனே துவக்க நடவடிக்கை எடுத்திடுக! வாலிபர் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “டெங்கு” காய்ச்சல் பரிசோதனைஆய்வகங்களை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அரசுப் பள்ளிகளை தனியார் வசம்ஒப்படைக்கும் நிதி ஆயோக்கின் பரிந்துரையை கைவிட வேண்டுமென இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாநிலக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்கூட்டம் திங்கள், செவ்வாய்ஆகிய தினங்களில் இராமேஸ்வரத்தில் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் பாலா, பொருளாளர் தீபா மற்றும் மாநில நிர்வாகிகள் ரெஜீஸ்குமார், தாமோதரன், பிந்து, பிரவீண்குமார், மணிகண்டன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், பாலச்சந்திரபோஸ், லெனின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆதிரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தீர்மானங்கள் விபரம் வருமாறு;தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. அரசுப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்திட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தி மாவட்டஅளவில் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் கல்விஉரிமை மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் முழுமையாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பலி எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் செயலர் போக்கே இதற்கு காரணம். தடுப்பு நடவடிக்கைகளுக்கு பதிலாக மூடிமறைக்கும் வேலைகளை செய்ய முயற்சிக்கக் கூடாது. இதைமாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மாவட்டந்தோறும் செய்திட வேண்டும். இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வீரமரணமடைந்த தோழர் சேகுவேரா நினைவு தினமான அக்.9ஆம் தேதியன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinasuvadu desk

Recent Posts

கோடாக் மஹிந்திரா வங்கி மீது நடவடிக்கை.. இவற்றுக்கெல்லாம் தடை விதித்த ஆர்பிஐ!

RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…

6 mins ago

குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து …

26 mins ago

அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…

43 mins ago

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…

1 hour ago

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

2 hours ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

2 hours ago