Categories: Uncategory

“தீவிரவாதிகள் எல்லோரும் காஷ்மீரை விட்டு ஓடத் தொடங்கியுள்ளனர்” – மார்தட்டும் அருண் ஜெட்லி!!

இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருவதால் காஷ்மீரை விட்டு தீவிரவாதிகள் ஓட தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி,  ஜம்மு – காஷ்மீரில் இருந்து, தீவிரவாதிகளை விரட்டுவதே மத்திய அரசின் இலக்கு என தெரிவித்தார்.
செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையால், தீவிரவாதிகள் கடுமையான பண தட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும்  காஷ்மீரை பயங்கரவாத மையமாக வைத்திருந்த அவர்கள், தற்போது, காஷ்மீரை விட்டு ஓட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்புவதற்கு காரணமான, கல்வீசும் கும்பல் பெருமளவில் குறைந்துள்ளனர் என்றும் தற்போதைய சூழலில் காஷ்மீரில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த எந்த பயங்கரவாதியும் கனவு காண முடியாது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Castro Murugan
Tags: india

Recent Posts

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

9 seconds ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

13 mins ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

44 mins ago

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

1 hour ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

2 hours ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

2 hours ago