சென்னையில் மேலும் ஒருவர் தீவிபத்தில் உயிரிழப்பு..

Image result for fire

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட  தீவிபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ் இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த  23ம்  தேதி அன்று சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதில் வெங்கடபிரகாஷ் அவரது மனைவி கீதா, மகள் சர்மிளா, மகன் கிஷோர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்   சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

விபத்து நடந்த மறுநாள் காலையே சிகிச்சை பலனின்றி  கீதா மற்றும்  மகன் கிஷோர், மற்றும் மகள் சர்மியா ஆகியோர் நேற்று உயிரிழந்தார்.  வெங்கடபிரகாஷ் மட்டும் உயிருக்கு போராடி வந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை வெங்கடபிரகாசும் உயிரிழந்தார். தீ விபத்தில் ஒரு குடும்பமே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment