Categories: இந்தியா

எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல இந்துத்துவ ரவுடிகளுக்கு தொடர்பு…..!

மூத்த பத்திரிகையாளர, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
பெங்களூரூவில் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேசை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவினர் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெயப்பிரகாஷ் என்கிற அண்ணாவுக்கும் மற்றும் அவருடைய கூட்டாளிகளான மராட்டிய மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த பிரவீன் லிம்கர், புனேயைச் சேர்ந்த சரங்க் அகோல்கர், மராட்டிய மாநிலம் சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா பட்டீல், சடாரா மாவட்டத்தைச் சேர்ந்த வினய் பவார் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிறப்பு விசாரணைக் குழுவினருக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் 5 பேருக்கும் ஏற்கனவே கோவா மற்றும் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது மட்டுமல்லாமல் ருத்ரா பட்டீல், சரங்க் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோருக்கு, கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20–-ந் தேதி மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் எழுத்தாளர் நரேந்திர தோபால்கர் கொல்லப்பட்ட வழக்கிலும், கடந்த 2015–-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16–-ந் தேதி எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்ட வழக்கிலும், ஆகஸ்டு 30–-ந் தேதி தார்வாரில் கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பூர்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்யின் துணை அமைப்பான சனாதன்னை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து முற்போக்கு எழுத்தாளர்களை கொலை செய்து வருகிறார்கள் என்பது இங்கு கவனிக்க படவேண்டிய ஒன்று.

Dinasuvadu desk
Tags: india

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

1 hour ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

2 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

2 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

2 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

3 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

3 hours ago