புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார். யோசனை: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். மேலும் அவர்,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், எங்கள் உட்பட அனைவருக்கும் இழப்பு உண்டு. ஆனால், அரசியல்சாயம் பூசி இந்த யோசனையை பார்க்க கூடாது. இதனால், அதிக பண செலவு குறைக்கப்படும் எனக்கூறியிருந்தார். தேவை என்ன? இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அளித்த பேட்டி: ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த என்ன தேவை என எங்களிடம் மத்திய அரசு கேட்டது. இதற்கு நாங்கள் செப்டம்பர் 2018 ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். ஆனால், இது குறித்து முடிவு மற்றும் தேவையான அரசியல் சட்ட திருத்தங்களை செய்வது மத்திய அரசின் கையில் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு: ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலம் புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2018 செப்டம்பரில் 40 லட்சம் ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.3,400 கோடி மற்றும் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…
Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும்…
Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…