ஆதார் எண்ணுடன் டிரைவிங் லைசென்சஸ் இணைக்கப்படும்;மத்திய அரசு அறிவிப்பு..!

இப்போது புதிதாக ஒரு திட்டத்தோடு களமிறங்கியுள்ளது, மத்திய அரசு. டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று பேசுகையில், டிரைவிங் லைசென்சுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். 
இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், ஒருவரின் டிஜிட்டல் அடையாளத்தையும், அங்க அடையாளத்தையும் ஒப்பிட முடியும் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். இப்படி ஒருபக்கம் டிஜிட்டல்மயமாகிக்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என அரசு நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment