இந்திய மக்களிடம் நன்மதிப்பைப் பெறும் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள்..!

சீனாவைச் சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் கால் பதித்தது முதல் அறிமுகப்படுத்திய அனைத்து மொபைல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. 
மொபைலில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது, மொபைலுக்கான உதிரிப்பாகங்கள் கிடைப்பது, மொபைலின் தரம் ஆகிய பிரிவுகளில் மற்ற மொபைல் நிறுவனங்களைவிட ஒன் பிளஸ் முன்னிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பயன்படுத்திய மொபைல்களின் ரீசேல் மதிப்பிலும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே முன்னிலையில் இருக்கிறது. அதிலும் ஒன்பிளஸ் மொபைல் வைத்திருப்பவர்கள் அதே மொபலை மற்றவர்கள் வாங்குவதற்கும் அதிகமாக பரிந்துரை செய்கிறார்களாம். 
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற மொபைல் நிறுவனங்கள் பட்டியலில் ஒன் பிளஸ் நிறுவனத்துக்கு அடுத்ததாக ஆப்பிள் நிறுவனமும் அதற்கடுத்ததாக விவோ நிறுவனமும் இருக்கிறது. 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment