Categories: Uncategory

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த மியான்மருக்கு ஐ.நா. எச்சரிக்கை!!

ஐ.நா.:
ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள மியான்மர் அதிபர் ஆங் சாங் சுகிக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று ஐநா செயலாளர் ஆன்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ”இந்த சூழ்நிலையை அவர் மாற்றவில்லை என்றால் நிலைமை பயங்கரமாக இருக்கும். இதன் பிறகு எதிர்காலத்தில் இந்த பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீண்டும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மர் ராணுவத்தினர் தற்போதும் அவர்களது நடவடிக்கையை தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்” என்றார்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரோஹிங்கியா தீவிரவாதிகள் போலீசார், சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி 12 பேரை கொலை செய்ததை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக நோபல் பரிசு வென்ற ஆம் சாங் சுகி பல தரப்பில் இருந்து விமர்சனங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொது மன்ற கூட்டத்தில் ஆம்சாங் சுகி கலந்து கொள்ளவில்லை. தவறான தொடர்பு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் வதந்தி மற்றும் போலி செய்திகளால் இது போன்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பங்களாதேஷில் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதற்கு மேல் அங்கு அடைக்கலம் கொடுக்க வாய்ப்பு இல்லை என்று அந்நாடு அறிவித்த பின்னரே கட்டரர்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Dinasuvadu desk
Tags: world

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

2 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

4 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

4 hours ago