சென்னை: இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கும், ஓ.பி.எஸ். தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலூரை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.