மெர்சல் படத்தை தடை செய்யக் கோரி அஸ்வத்தாமன் என்ற பா.ஜ.க. பிரமுகர் தொடுத்த பொது நல மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “உங்களுக்கு பொதுநலன்களில் அக்கறை இருந்தால் சமூகத்தை வாட்டும் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து மனு செய்திருக்கலாமே என் செய்யவில்லை? அல்லது உங்களுக்கு படம் பிடிக்கலைன்னா படம் பார்க்காதிங்க” என்று மனுதாரரை சரமாரியாக கேள்வி கேட்டது.
.
அதற்கு அந்த மனுதாரர் மனம் திறந்து உண்மையை ஒப்புக் கொண்டிருக்கவேண்டும். “எங்களை போன்ற கட்சியினருக்கு மது அருந்துதல், புகை பிடித்தல், கந்து வட்டி போன்ற மக்கள் பிரச்சினைகளை பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை. எங்களின் இதய தெய்வம் நரேந்திர மோடியை யாரேனும் குறை சொல்வதை எங்களால் பொறுத்துக்க கொள்ள முடியாது” என்று அவர் தனது பதிலை கூறியிருக்கிறார்.