தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை அடுத்த பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஒன்றரை மாதத்தில் நந்தினி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
ராஜேஸ்வரியின் குடும்பத்துக்கும் அவரது உறவினரான வண்டிமலையான் என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்த வண்டிமலையான் வீட்டில் இருந்த ஒன்றரை மாத பெண் குழந்தையான நந்தியை தூக்கி வீசியுள்ளார்.இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது .