சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்து ஆய்வு செய்யும், தேசிய கவுன்சில், ‘இந்தியாவில் இயற்கை விவசாயம்’ என்ற ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. இதை வெளியிட்டு, அமிதாப் காந்த் பேசியதாவது: இந்தியாவில், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகியவை, இயற்கை விவசாயத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, மழை பொழிவு அதிகம் உள்ள, மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்களிலும், ரசாயன உரங்கள் குறைவாக பயன்படுத்தப்படும், கிழக்கு பகுதிகளிலும், இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இயற்கை விவசாயத்தில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. இத்துறை வளர வேண்டும் என்றால், அரசை ஒதுக்கிவிட்டு, தனியார் துறையினர் களத்தில் இறங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், பாரம்பரிய விதைகள், இயற்கை வேளாண் முறையில் உருவாக்கப்பட்ட விதைகள், ரசாயன கலப்பில்லாத உரங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்திலும், விற்பனையிலும் ஈடுபட வேண்டும். ஒருசில விவசாய குழுக்கள், இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
இதில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், சிறந்த தரமான விளை பொருட்களை உருவாக்க முடியும். விளை பொருட்களின் தரம் சிறப்பாக இருந்தால், இயற்கை விவசாயத் துறை சீரிய வளர்ச்சி காணும்.தற்போது உள்ள சந்தை முறை தான், இயற்கை விளை பொருட்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இச்சந்தைகளில் விற்கப்படும் விளை பொருட்களை, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை எனக்கூறி, ஏமாற்றுவது நடக்கிறது. அதனால், இயற்கை விளை பொருட்களுக்கு என, தனி சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். அது, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும்.
இயற்கை வேளாண் பொருட்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைய விதிமுறைகள் இல்லாததால், அவற்றின் விற்பனையில் மோசடி நடக்கிறது. இதை தடுக்க, இயற்கை விளை பொருட்களுக்கு, ஒரே சீரான தர நிர்ணய நடைமுறை தேவை. இவ்வகை பொருட்களுக்கு என, தனி முத்திரை, ‘பேக்கேஜிங்’ மற்றும் மோசடிக்கு தண்டனை வழங்கும் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய விதிகளின்படி, தற்போது, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே விதிகளை, இயற்கை வேளாண் பொருட்களின் உள்நாட்டு விற்பனைக்குக்கு பின்பற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…
M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…