கோவில்பட்டியில் கழுதைகளை விட்டு நூதனப் போராட்டம்…!

தூத்துக்குடி-கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கழுதைகளை விட்டுபோராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கழுதைகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment