தேனியில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் மற்றும் காவல்துறை

தேனியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தனியார் KAS பேருந்து அதற்கு பின்னால் வந்த மதுரை மாட்டுத்தாவனி செல்லும் TN 58 N 1863 என்ற அரசு பேருந்துக்கு வழி விடாமல் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் TN 58 N 1863 என்ற அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் அந்த தனியார் பேருந்தை வாளாந்தூர் இரயில்வே கேட்டில் ரோந்துப் பணியில் இருந்த ரோந்து காவல்துறை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றார் தனியார் பேருந்து KAS ஓட்டுநர் , உடனே ரோந்து காவல்துறையினர் செக்கானூரணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் ,செக்கானூரணி காவல்துறையினர் அந்த தனியார் பேருந்தை செக்கானூரணியில் மறித்து தனியார் பேருந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் வைத்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர் …….

author avatar
Dinasuvadu desk

Leave a Comment