. தீபாவளிக்கு மெர்சலா களமிறங்கும் மெர்சல்

. தீபாவளிக்கு மெர்சலா களமிறங்கும் மெர்சல்

மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியதை அடுத்து ரிலீஸ்க்கான சிக்கல் நீங்கியுள்ளது. இதனால் தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘தெறி’ திரைப்படத்திற்கு பிறகு அவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் தமிழர் தம் தொன்மைசார் பண்பாட்டு அடையாளமான ஜல்லக்கட்டு குறித்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ துறையில் உள்ள ஊழலை பேசுவதாகவும் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்தில் விலங்குகளை துன்புறுத்துவதாக புகார்.

தடையில்லா சான்று
இந்நிலையில், மெர்சல் படத்திற்கு இன்று(அக்., 16) விலங்குகள் நலவாரியத்தில் சிறப்புக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் மெர்சலுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து ரிலீஸ் சிக்கலில் இருந்த முக்கியமான பிரச்சனை தீர்ந்துள்ளது.

விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளதால் இனி தணிக்கை சான்றும் பெறுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிகிறது. ஆகையால் வருகிற தீபாவளிக்கு மெர்சலாக களமிறங்குகிறது விஜய்யின் மெர்சல்

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *