Categories: Uncategory

கிருஷ்ணாசாமி மகள் மருத்துவ படிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி அதிரடி கருத்து





நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் அதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராகவும் தீவிரமாக பேசிவரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி அனிதாவால் மருத்துவப் படிப்பிற்குள் நுழைய முடியவில்லை. இதற்கு நீட் தேர்வே காரணம் எனக் கூறி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாணவி அனிதா. ஆனால் உச்ச நீதிமன்றமோ மற்ற மாநிலங்களைப் போல தமிழ் நாடும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனால் ஏமாற்றமடைந்த மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணசாமியோ நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தப்ட வேண்டும் எனக் கூறி நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசிவருகிறார். மேலும் மாணவி அனிதா மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்பட தெரிவிக்க முடியாது எனவும் அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்தினால் உண்மை என்னவென்று தெரியும் எனவும் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, கிருஷ்ணசாமி அவருடைய மகள் பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதும், அபோதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டு அதன் மூலம் அவருடைய மகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் வாங்கியதாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது மகளுக்கு சிபாரிசு மூலம் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கிய கிருஷ்ணசாமி இப்பொழுது மற்ற ஏழை மாணவிகளின் மருத்துவப் படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவது அவரது சுயநலம் என விமர்சித்துள்ளார்.
இந்தப் பதிவை பால பாரதி அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அந்தப் பதிவு அவருடையப் பக்கதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Dinasuvadu desk
Tags: #Politics

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

1 hour ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

2 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

2 hours ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

9 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

12 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

14 hours ago