சம்பாதிக்காம எப்படி ஜாலியா இருக்கீங்க?: நடிகை பிபாஷா பாசுவை ஓட்டும் நேட்டிசன்கள்……..!
சம்பாதிக்காம எப்படி ஜாலியா இருக்கீங்க?: நடிகை பிபாஷா பாசுவை ஓட்டும் நேட்டிசன்கள்……..!
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சின்னத்தி
ரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்குமே மார்க்கெட் இல்லை.
இருப்பினும் ஃபேஷன் ஷோக்கள், மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
புகைப்படம்
பிபாஷாவும் சரி, கரணும் சரி யார் கேட்டாலும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் அண்மையில் புகைப்படக் கலைஞர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்துள்ளார் பிபாஷா.
பிபாஷாவும், கரணும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் ஒருவர் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தனர். இதனால் பிபாஷா கோபம் அடைந்தார்.
கணவன், மனைவி இரண்டு பேருக்குமே வேலை இல்லை. சம்பாதிக்காமல் எப்படி ஜாலியாக செலவு செய்கிறார்கள். பணம் இல்லாமல் என்ன செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பிபாஷா, கரணை விமர்சித்தனர்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் பிபாஷா தனது கணவரையும் சேர்த்து அழைக்குமாறு கூறுகிறார். இல்லை என்றால் அவர் என்னுடன் வருவார் அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று கன்டிஷன் போடுவது பலரையும் கடுப்படைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.