ஆர்எஸ்எஸ் பேரணியை துவக்கி வைக்கிறார் தமிழக அதிமுக அமைச்சர்..!

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி
வைப்பார் என்கிறது அவர்களது சுவரொட்டி. மதவெறியை தூண்டிவிடும்

அந்த அமைப்பின் பேரணியை ஓர் அமைச்சரே துவக்கி வைப்பது காலக்
கொடுமை. பதவியை தக்கவைக்க எத்தகைய அக்கிரமத்திற்கும் இவர்கள்
துணைபோவார்கள் என்பது உறுதியாகிறது. தமிழகத்தில் மக்கள் ஒற்று
மையைப் பேண அரசை நம்பி பயனில்லை. மனிதநேய சக்திகள்தாம் அதை
காக்க களம் காண வேண்டும். அதற்குத்தான் நேற்று துவக்கப்பட்டிருக்கிறது
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிறார் பேராசிரியர்,எழுத்தாளர் அருணன்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment