இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இளம் இந்தியா ஆகிய அமைப்பு சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மணி பள்ளி அரங்கில் நடைபெற்றது.
இதற்கு கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். தொழில் கூட்டமைப்பு தலைவர் நாராயணன், உடல் உறுப்பு தான அமைப்பின் திட்ட தலைவர் மருத்துவர் மணி, மருத்துவர் பிரவீன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பங்கேற்றுப் பேசினார்.
அவர், “அளவுக்கு மீறி உள்ள சொத்துக்களை ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த சொத்தே உன்னை அழித்துவிடும் என்று ஆதித்தமிழன் முன்பே கூறினான்.
இந்திய தலைவர்களில் காந்தி, காமராஜர் ஆகியோருக்கு இணையான தலைவர்கள் வேறு யாரும் இல்லை. காந்தி இந்திய விடுதலைக்காகவும், தீண்டாமையை ஒழிப்பதற்காகவும் மிக கடுமையாக பாடுபட்டார்.
காமராஜர் தமிழகத்தில் அணைகளை கட்டினார், தொழிற்சாலைகளை தொடங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தினார். ஏழை மாணவ, மாணவிகள் படிக்க பள்ளிகளையும், அவர்கள் மதியம் சாப்பிட உணவும் வழங்கினார்.
உடுமலை பேட்டையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அவரது பெற்றோர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த 3–வது நாளில் ஏற்பட்ட விபத்தில் அந்த மாணவர் இறந்து விட்டார். அவரது உடல் உறுப்புகளை அந்த மாணவரின் பெற்றோர் தானமாக வழங்கினர். மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாகும் இந்த உடல் உறுப்புகளை அனைவரும் தானம் செய்ய முன்வர வேண்டும்.
இங்கு மாநகராட்சி தனி அதிகாரி பேசும்போது, போன் செய்தால் உடல் உறுப்புகள் கிடைக்கும் அளவிற்கு உடல் உறுப்பு தானம் நடைபெற வேண்டும் என்று சொன்னார். எனவே இறந்த பிறகும் வாழ உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் சிவகுமார், தனிஅதிகாரி விஜயகார்த்திகேயன் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…