தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தென்காசி முதல் நெல்லை வரை கந்து வட்டி கொடுமைகளை எதிா்த்து நடைபயணம் காலையில் துவங்கியது. காவல்துறை அனுமதி கிடையாது என்று கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.
கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக வாலிபர் சங்கமும், இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சியினரும் நடைபயணம் செல்வதென திட்டமிட்டனர். வட்டிக்காரர்களால் மக்கள் எரிந்து சாகும் கொடுமையை அம்பலப்படுத்தி, மாற்று என்ன? மக்களும், அரசும் செய்யவேண்டியது என்ன என்பதை பிரச்சாரம் செய்வதுதான் நோக்கம்.