இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக பங்கேற்கும் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரனதுங்கா கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் ஒன்றினை தெரிவித்திருந்தார்.
2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி மோசமாக தோற்றதற்கு சூதாட்டமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேசிய அணித் தேர்வாளருமான ப்ரமோதய விக்ரமசிங்கேவும் சமீபத்தில் இலங்கை அணி வீரர்கள் மீது சூதாட்டப் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.