ராஜமௌலிக்கு ஆந்திர முதல்வர் கொடுத்த பெரிய வேலை

ராஜமௌலி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா, நான் ஈ, பாகுபலி ஆகிய படங்கள் அவரின் திறமைக்கான வாழ்நாள் சான்று.
இந்நிலையில் ராஜமௌலிக்கு தற்போது மிகப்பெரும் பொறுப்பு ஒன்று வந்துள்ளது, அது என்னவென்றால் ஆந்திர முதல்வர் தலைநகர் அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக நிர்மாணிக்க விரும்புகின்றாராம்.
அதனால், இதற்காக ஜப்பானிலும் லண்டன் போன்ற நகரங்களிலும் உள்ள புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களை தலைநகரின் வரைபடம் கேட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி இதையெல்லாம் மேற்பார்வையிட ராஜமௌலியை தான் ஆந்திராவின் முதல்வர் நிர்ணயித்துள்ளார், சினிமா தாண்டி இதிலும் ராஜமௌலி கலக்குவாரா பார்ப்போம்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment