ஐ.பி.எல். சீசனில் கடந்த இரண்டு ஆண்டாக சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தடை செய்யப்படிருன்தனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் அணிகள் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடக்கூடுமா என விவாதம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு அணியில் குறைந்தபட்சம் 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
அணி உரிமையாளர்களில் கோரிக்கை நியாமனதாக இருந்தால் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இந்த வீரர்கள் எண்ணிக்கையில் கண்டிப்பாக இரு வெளிநாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அனைவரின் எதிர்பார்ப்பும் டோனி மீண்டும் சென்னை அணிக்கே வர வேண்டும் என்பதே .இதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .