Categories: Uncategory

கத்தாரில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க ஆலோசனை…..!

கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகள் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கப்படும்.
இந்தப் புதிய சட்ட மசோதாவின்கீழ், குடியுரிமை பெறத் தகுதி பெற்றவர்களுக்கு உள்துறை அமைச்சகம் சட்ட அனுமதி வழங்கும்.
வளைகுடா நாடுகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவது அபூர்வம். சுமார் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தாரில், மூன்று லட்சம் பேர் மட்டுமே கத்தார் நாட்டுக் குடிமக்கள் உள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுப்பதற்கு, உள்நாட்டில் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டால், உள்நாட்டின் கட்டமைப்பு மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
புதிய சட்டத்தின்படி, நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளுடன், அங்கு சொத்து வாங்கும் உரிமையும் கிடைக்கும்.
வெளிநாட்டினர் அங்கு தொழில் தொடங்க வேண்டுமானால், கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுடன் கூட்டு வைக்க வேண்டியது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனி மனித வருமானத்தில், உலகிலேயே பெரிய செல்வந்த நாடானா கத்தாரில், 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் எழுந்துள்ளன.
தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை கத்தார் ஊக்குவிப்பதாக கத்தார் மீது குற்றம்சாட்டிய சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நாடுகள், ஜூன் ஐந்தாம் தேதி முதல் பல்வேறு தடைகளை கத்தார் மீது விதித்தன.
அரபு நாடுகளில் வசிக்கும் கத்தார் குடிமக்கள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும், தங்கள் குடிமக்கள் கத்தாரில் இருந்து வெளியேறுமாறும் உத்தரவிட்டதோடு, கத்தாருடனான போக்குவரத்தையும் முறித்துக் கொண்டன.
‘கஃபாலா’ என்றழைக்கப்படும் பணி வழங்கும் அமைப்பு முறையின்படி, கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணி மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், முதலாளியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
உள்துறை அமைச்சகம், நிரந்தரக் குடியுரிமை கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஒரு குழுவை நியமிக்கும் என்று கே.யூ.என்.ஏ கூறுகிறது.

Castro Murugan
Tags: world

Recent Posts

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

24 mins ago

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!

Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

35 mins ago

தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…

1 hour ago

விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…

1 hour ago

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

2 hours ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

2 hours ago